அண்மைய செய்திகள்

recent
-

சர்வோதைய அமைப்பின் சர்வ மத தலைவர்களின் தேசிய மாநாடு இன்று.

தேசிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியின் சர்வ மத தலைவர்களின் தேசிய மாநாடு இன்று சனிக்கிழமை மாலை 2 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட சர்வோதைய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சிறினிவாசன் யுகேந்திரா தெரிவித்தார்.


 இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் 1327 சர்வமதத்தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ள குறித்த தேசிய மாநாட்டில் மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த 16 சர்வமதத்தலைவர்கள் கலந்து கொள்ளுவதற்காக கொழும்பிற்கு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 குறித்த சர்வ மத தலைவர்களின் தேசிய மாநாடு சர்வோதைய அமைப்பின் இயக்குனரும்,ஸ்தாபகருமான ஏ.ரி.ஆரிய ரட்ன தலைமையில் இடம் பெறவுள்ளது.

குறித்த மாநாட்டின் நோக்கமானது கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லினக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படும் சிவில் அமைப்புக்களுக்குள் செயற்பட முடியுமான வழிகளின் மூலம் செயற்பாடுடன் எழுந்து நிற்கும் சர்வோதைய இயக்கத்தின் வேலைத்திட்டங்களின் அனுபவம் மற்றும் பயன்களை பகிர்ந்து கொள்வதே என சர்வோதைய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சிறினிவாசன் யுகேந்திரா மேலும் தெரிவித்தார்.
சர்வோதைய அமைப்பின் சர்வ மத தலைவர்களின் தேசிய மாநாடு இன்று. Reviewed by Admin on March 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.