அண்மைய செய்திகள்

recent
-

மடு கல்வி வலய மாணவர்களுக்கு மலேரியா விழிப்புணர்வு புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைப்பு.



பாடசாலை மாணவர்களுக்கு மலேரியா காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் சர்வோதைய அமைப்பு மலேரியா விழிப்புணர்வு தொடர்புடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட ஒரு தொகுதி அப்பியாசக்கொப்பிகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மடு பிரதி கல்விப்பணிப்பாளரிடம் கையளித்துள்ளதாக மன்னார் மாவட்ட சர்வோதைய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சிறினிவாசன் யுகேந்திரன் தெரிவித்தார்.


 நேற்று வெள்ளிக்கிழமை மாலை மடு வலயக்கல்விப்பணிமனையில் வைத்து மடு பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.பி.குரூஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மடு கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 5 பாடசாலைகளுக்கு குறித்த அப்பியாசக்கொப்பிகள் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த 5 பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் சுமார் 2500 அப்பியாசக்கொப்பிகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

 இதன் போது தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள்,மன்னார் மலேரியா தடை இயக்கத்தின் பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் என்.அரவிந்தன், சர்வோதைய அமைப்பின் சமூக வேலை த்திட்ட இணைப்பாளர் எஸ்.கனேஸ் ஆகியோர் கலந்து கொண்டு மலேரியா விழிர்ப்புணர்வு தொடர்புடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட அப்பியாசக்கொப்பிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.





மடு கல்வி வலய மாணவர்களுக்கு மலேரியா விழிப்புணர்வு புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைப்பு. Reviewed by Admin on March 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.