சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 10ம் திகதிக்கு முன்னர் வெளியாகும்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்கு முன்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பரீட்சை நடைபெற்ற காலத்தில் சீரற்ற காலநிலை நிலவியதனால், இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 9,10 மற்றும் 11ம் திகதிகளில் மீளவும் சில பரீட்சைகள் நடைபெற்றன.
மூன்று லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். சீரற்ற காலநிலை காரணமாக சில பரீட்சார்த்திகள் வேறும் பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றியதாகவும் இதனால் பெறுபேறுகளை வெளியிடுவதில் சிரமங்கள் நிலவியதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக பரீட்சை பெறுபேறுகளை வெளியீட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். சீரற்ற காலநிலை காரணமாக சில பரீட்சார்த்திகள் வேறும் பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றியதாகவும் இதனால் பெறுபேறுகளை வெளியிடுவதில் சிரமங்கள் நிலவியதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக பரீட்சை பெறுபேறுகளை வெளியீட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 10ம் திகதிக்கு முன்னர் வெளியாகும்
Reviewed by Admin
on
March 24, 2013
Rating:
Reviewed by Admin
on
March 24, 2013
Rating:


No comments:
Post a Comment