அண்மைய செய்திகள்

recent
-

வலதுகுறைந்தோருக்கு விளையாட்டுக்கழகம் ஆரம்பிப்பு

கன்டிக்கப் நிறுவனத்தினால் வவுனியா மாவட்டத்தில் வலதுகுறைந்தோருக்கான விளையாட்டுக்கழகமொன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.


 அனைவருக்கும் விளையாட்டு என்னும் நிகழ்ச்சித்திட்டத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் போது குறித்த விளையாட்டுக்கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் அதற்கான கோவை விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்போது பல்வேறு வகையிலும் விசேட தேவையுடையோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தெரிவு செய்திருந்தனர்.

 இந்த நிகழ்விற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ். எம். சிசிர செனவிரத்தன, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஐ. சுவானி, நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் ஸ்டீவ் ஜாட்நெட், சமூக ஒருங்கிணைப்பாளர் எஸ். மயூரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
வலதுகுறைந்தோருக்கு விளையாட்டுக்கழகம் ஆரம்பிப்பு Reviewed by Admin on March 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.