அமைச்சர் றிசாட் பதியுதின் மீது பிழையான பிரசாரங்களை நிறுத்தவேண்டும்-

மேலும் தெரிவிக்கையில் கடந்த வாரம் தமிழ் இணைய தளங்களிலும் மற்றும் சிங்கள பத்திரிக்கை ஒன்றிலும் முதல் பந்தியில் றிஷhட் பதியுதின் 2000 ஏக்கர்; காணி கொள்ளையை நிறுத்து என்று முதல் பந்தியிலும் இரண்டாம் பந்தியில் புத்தளம் மக்களை மன்னாரில் குடியேற்றுகின்றார் என்றும் ஊடங்களில் வாய்லாக வெளிவந்தன.அன்று பிரபாகரன் ஆயுதத்தினால் முஸ்லிம்களை வெளியேற்றினார் இன்று சில இனவாதக்குழுக்;களும் ஊடகங்களும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
மேலும் 1990ம் ஆண்டு யுத்தத்தினால் வெளியேற்றப்பட்ட மக்கள் அகதிகளாக புத்தளம், குருனாகல், அநுராதபுரம் போன்ற பல மாவட்டங்களில் அகதிகளாக இன்னும் வாழ்ந்து வருகின்றனர். பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களை தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதனை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் முஸ்லிம்கள் உண்மையிலே தைரியமானவர்களாக காணப்படுகின்றார்கள் ஏனெனில் என்னுடைய மட்டக்களப்பு மாவட்டமும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டது.
அவர்களுக்கு சகல வசதிகள் செய்து கொடுத்தும் இம்மக்கள் தங்களது சொந்தப்பிரதேசங்களுக்கு திரும்பிச்செல்ல விருப்பமில்லாமல் இருக்கின்றார்கள். ஆனால் எவ்விதமான அடிப்படை வசதிகளுமின்றி மன்னார் மாவட்ட மக்கள் தங்களது பிரதேசங்களில் வாழ செல்கின்றபோதும் அதற்குரிய வழி வகைகளை சில அமைச்சர்கள் செய்து கொடுக்கின்ற போதும் அதற்கு முட்டுக்கட்டையாக சில அமைப்புக்கள் செயற்படுகின்றது என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர்; றிஷhட் பதியுதின் (பா.உ)
பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் மற்றும் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் அலிகான் nஷரிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எஸ் எச் எம் வாஜித்
அமைச்சர் றிசாட் பதியுதின் மீது பிழையான பிரசாரங்களை நிறுத்தவேண்டும்-
Reviewed by NEWMANNAR
on
March 13, 2013
Rating:

No comments:
Post a Comment