அண்மைய செய்திகள்

recent
-

விழித்தெழு!(கவிதை)

விழித்தெழு!!!
ஏய் பிரபஞ்சமே!
இன்னும் எங்களை -நீ 
வெறும் புழுக்கலாகவா 
பார்க்கின்றாய்?

நாமொன்றும் 
ஆண்களுக்கும்,
முதலாளித்துவத்துக்கும்  
அடிமைச்சாசனம் எழுதி 
வைத்தவர்களென்று
எண்ணிவிடாதே.................

ஆதிக்கத்தின் 
அடக்குமுறையை 
உடைத்தெறிந்து 
பெண்களும்  சரிநிகர் என்று 
உலகுக்கு உரத்துச்சொன்ன 
நாள் தான் இன்றன்றோ!

இனி வரும் 
காலங்கள் சொல்லும் 
பெண்களின் சாதனைகளை 
அது வரை தூங்குவோம் 
என்றெண்ணும் பெண்களே
 விழித்தெழு இந்நாளில் .......................... 

நீ-தேடுவதைப்
பெற்றுக்கொள்ள, 
இன்றே  புறப்படு -இங்கே 
கேட்காதவரை கிடைக்காது 
தட்டாதவரை திறக்காது
அதுவரை போராடு .........................

                             *சந்துரு *
விழித்தெழு!(கவிதை) Reviewed by Admin on March 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.