அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு பந்துகள் வழங்கி வைப்பு.


இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு உதைப்பந்துகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் வலயக்கல்வி பணிமனையில் வலயக்கல்விப்பனிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையில் இடம் பெற்றது.


இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக்,இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அதிகாரிகள்,அமைச்சர் றிஸாட் பதீயுதின் அவர்களின் மாவட்ட இணைப்பாளர் எம்.முனவ்பர்,பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கு 4 உதைப்பந்துகள் வீதம் பாடசாலை அதிபர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.









இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு பந்துகள் வழங்கி வைப்பு. Reviewed by Admin on April 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.