முள்ளிவளையில் தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரை:
இன்று அதிகாலை 2 மணியளவில் 10 பேர் கொண்ட குழுவினர் குறித்த பகுதிக்குள் நுழைந்து 4 பொதுமக்களின் அரைந்திரந்தர வீடுகளையும், சொத்துக்களையும் எரித்து தீக்கிரையாக்கியுள்ளனர்.
இதனுடன் நின்றுவிடாது, அங்கிருந்த ஏனைய மக்களின் வீடுகளையும் எரித்து தீக்கிரையாக்க அவர்கள் முற்பட்டுள்ளனர்.
எனினும் மக்கள் உஷாரடைந்து எதிர்க்க முற்பட்ட நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு முள்ளியவளை கிராமமே கொதிப்பிலும், விரக்தியிலும் ஆழ்ந்துள்ளது.
முள்ளிவளையில் தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரை:
Reviewed by NEWMANNAR
on
April 21, 2013
Rating:
No comments:
Post a Comment