அண்மைய செய்திகள்

recent
-

வடக்கின் ஊடக சுதந்திர நிலைமை குறித்து கபே அமைப்பு கவலை

வடக்கின் ஊடக சுதந்திர நிலைமை குறித்து கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஊடகங்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 வடக்கில் ஊடகவயிலாளர்களும் ஊடகங்களும் சுய தணிக்கை வழிகளைப் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. வடக்கில் தொடர்ச்சியாக ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட காரணத்தினால் சுய தணிக்கையை ஊடகங்கள் பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளது.

 தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மனித உரிமைகள், சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் தொடர்பில் ஊடகங்கள் சுய தணிக்கையை பின்பற்றுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

 யாழ்ப்பாணத்திலிருந்து பிரசூரமாகும் சில ஊடகங்கள் தங்களது நிலைமைகளை மென்மையாக்கிக் கெண்டு தகவல்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் ஊடக சுதந்திர நிலைமை குறித்து கபே அமைப்பு கவலை Reviewed by Admin on April 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.