அமெரிக்காவில் குண்டு வெடிப்பு!: 3 பேர் பலி, பலரின் நிலை கவலைக்கிடம்
மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
பொஸ்டன் நகரில் இன்று நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரதன் போட்டியைக் குறி வைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மரதன் போட்டி முடிவடையும் இடத்தில் இந்த இரு குண்டுகளும் வைக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஒரு 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 144பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அவை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டன.
இந்தத் தாக்குதல் குறித்து எப்.பி.ஐ. விசாரணையை ஆரம்பித்துள்ளது. இத் தாக்குதல் தொடர்பாக ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்தவரை தேடுவதாக எப்.பி.ஐ .அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் குண்டு வெடிப்பு!: 3 பேர் பலி, பலரின் நிலை கவலைக்கிடம்
Reviewed by NEWMANNAR
on
April 16, 2013
Rating:

No comments:
Post a Comment