அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மீன் பிடி மந்த கதியில்.


காலநிலைக்கு மாறாக மன்னாரில் தற்போது கடற்காற்று வீசி வருகின்றமையினால்    கடற்தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட மீனவர்கள் தெரிவித்தள்ளனர்.

-குறித்த கடற்காற்று தொடர்ந்து ஒரு மாதங்களுக்கு நீடிக்க்ககூடும் என மீனவர்கள் தெரிவித்தள்ளனர்.இதனால் ஆழ்கடல் மீன்பிடித்தொழிலும் பாதிப்படைந்துள்ளது.


இதனால் மன்னாரில் கடல் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏறபட்டுள்ளதோடு விலையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக நண்டு,கணவாய்,இறால்,போன்ற கடல் உணவுகளின் விலை அதிகரித்துள்ளதோடு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

-தென்பகுதிக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதற்காக அதிகளவான வியாபரிகள் மன்னார் வருகை தந்துள்ள போதும் அவர்களுக்கு போதுமான அளவு கடல் உணவுகள் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.

-இதே வேளை மணலை,சாலை, கிலைக்கன்,ஊழி,பாறை போன்ற மீன்கள் தற்போது பிடிபடுகின்றது.குறித்த மீன்கள் கிலோ 300 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை தற்போது சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மன்னாரில் மீன் பிடி மந்த கதியில். Reviewed by NEWMANNAR on May 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.