மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் வினியோகம்-மின் பாவனையாளர்களது பெறுமதி வாய்ந்த மின் உபகரணங்கள் பழுதடைந்த நிலை.
.jpg)
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக இரவு பகல் பாராது மன்னார் மாவட்டத்தில் மின்சாரம் நிமிடத்திற்கு நிமிடம் திடீர்,திடீர் என தடைப்படுவதுடன் மின்சாரம் மீண்டும் சீறிப்பாய்ந்து வருவதினால் மின் பாவனையாளர்களது பெறுமதி மிக்க மின்சாதண பொருட்கள் பழுதடைந்துள்ளது.
குறிப்பாக வானொலி,தொலைக்காட்சி,கணணி உள்ளிட்ட பல விதமான பெறுமதி மிக்க மின்சாதண பொருட்கள் பழுதடைந்திருப்பதாக மின் பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-தற்போது பகல் நேரங்களில் திடீர்,திடீர் என மின்தடை ஏற்பட்டு வருகின்றது.இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மின்தடங்கள் ஏற்படுவதோடு இரவு 9 மணிக்கு பின் முழுமையாக மின் தடை ஏற்படுகின்றது.
இதனால் மின் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக எதிர் வரும் கா.பொ.த.உயர்தரப்பரிட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தமது இரவு நேர கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே மன்னார் மாவட்ட மின் பாவனையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து மன்னார் மின்சார சபை உரிய நடவடிக்கை எடுத்து மின் பாவனையாளர்களுக்கு சீரான மின் வினியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் பாவனையாளர்கள் மன்னார் மாவட்ட மின்சார சபை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனா
(மன்னார் நிருபர்)
(20-06-2013)
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் வினியோகம்-மின் பாவனையாளர்களது பெறுமதி வாய்ந்த மின் உபகரணங்கள் பழுதடைந்த நிலை.
Reviewed by NEWMANNAR
on
June 20, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment