அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வாக்களர்களை பதிவு செய்வதில் கிராம சேவையாளர்கள் அலட்சியம்-வினோ எம்.பியிடம் முறைப்பாடு.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராம சேவையாளர் பிரிவுகளில் 2013 ஆம் ஆண்டுக்கான  வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ளச் செல்லுகின்ற போது குறித்த சில கிராம சேவையாளர்கள் பதிவுகளை மேற்கொள்ள மறுப்பு தெரிவிப்பதாக பாதிக்கப்பட்ட வாக்களர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.


2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் டாப்பில் பதிவில் உள்ள வாக்காளர்கள் 2013 ஆம் ஆண்டுக்கான  பதிவுகளை மேற்கொள்ளுவதற்காக தற்போது கிராம சேவகர்களிடம் சென்று தமது பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டுக்காண வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ளுவதற்காக கிராம சேவையாளர்களை நாடினால் கிராம சேவையாளர்கள் சிலர் எங்கள் மீது சந்தேகங்களை ஏற்படுத்தி கதைப்பதோடு   பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

வாக்காளர் டாப்பில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் குறித்த வாக்காளர்கள் சமாதான நீதவான் ஒருவரிடம் தமது இருப்பிடத்தை உறுதிப்படுத்தி கடிதம் கொண்டு வரும்படி கேட்பதாக பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ள சில கிராம சேiவாயளர்கள் உதவியாளர்களை வைத்து வீடு வீடாக  பதிவுகளை மேற்கொள்ளுகின்ற போது குறித்த உதவியளர்கள் உரிய முறையில் வீடுகளுக்குச் செல்லாது அவர்களது சுய விருப்பத்தின் பேரில் பதிவுகளை மேற்கொள்ளுவதினால் குறித்த பிரச்சினைகள் இடம் பெறுவறுவதாக பாதீக்கப்பட்டவாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே வேலை தலைமன்னார் பியர் பகுதியிலும் வாக்காளர்களை பதிவு செய்வதில் பல்வேறு பிரச்சினைகள் இடம் பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட வாக்களர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திடம் முறையிட்டுள்ளனர்.
மன்னாரில் வாக்களர்களை பதிவு செய்வதில் கிராம சேவையாளர்கள் அலட்சியம்-வினோ எம்.பியிடம் முறைப்பாடு. Reviewed by NEWMANNAR on June 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.