அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் 600 ஹெக்டேயர் நிலத்தில் இறப்பர்!

வடக்கு பகுதியில் பனை மரங்களுக்கு பதிலாக இறப்பர் செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் 600 ஹெக்டேயர் நிலத்தில் புதிதாக இறப்பரை பயிரிட பெருந்தோட்டத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.



இதனடிப்படையில் 97 ஹெக்டேயர் நிலத்தில் இறப்பர் பயிரிடப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் 497 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இறப்பர் பயிரிடப்பட உள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 குடும்பங்கள் இறப்பர் பயிர் செய்கையை ஆரம்பித்துள்ளனர். இறப்பர் ஆராய்ச்சி றிறுவனத்தின் ஆலோசனையும் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

பனைமரம் தன்னகத்தே அதன் அனைத்து பகுதிகளையும் தமிழ்மக்கள் பயன்படுத்திவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
பனையில் இருந்து ஓலை,பனம்பழம்,பனங்கிழங்கு,வீடுகட்டுவதற்கு மரம்,வேலி அடைப்பதற்கு மட்டை என அனைத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரு வளம்தரும் தமிழர்களின் சொத்தாக பனைமரம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் வாழ்வும் வரலாற்றுடனும் ஒன்று கூடிநிற்பது பனைமரம்..
முல்லைத்தீவில் 600 ஹெக்டேயர் நிலத்தில் இறப்பர்! Reviewed by Admin on June 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.