மன்னார் மாவட்ட ஆயரை புதிய பிரபாகரன் என சித்தரிக்கும் பொதுபலசேனா தேரர்
தமிழர் என்பதால் மன்னார் ஆயர் இலங்கைக்கு எதிராக பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுகின்றார். எனவே இவருக்கு எதிராக குரல் கொடுக்க கத்தோலிக்கத் திருச்சபையில் உள்ள சிங்கள ஆயர்கள் அனைவரும் முன்வரவேண்டும்.
தேசப்பற்று மிக்க கத்தோலிக்கத் திருச்சபையின் சிங்கள ஆயர்கள் அனைவரும் நாடு எதிர்கொண்டுள்ள இந்த தீர்க்கமான கட்டத்தில் எம்முடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
ஒற்றையாட்சியை பலப்படுத்துவோம், மாகாண சபை முறைமையை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் பௌத்த அமைப்புக்களின் ஒன்றியமான மாகாண சபை முறைமையினை ஒழிப்பதற்கான அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மன்னார் மாவட்ட ஆயரை புதிய பிரபாகரன் என சித்தரிக்கும் பொதுபலசேனா தேரர்
Reviewed by Admin
on
June 27, 2013
Rating:

No comments:
Post a Comment