அண்மைய செய்திகள்

recent
-

மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடற்பரப்பில் நிலவுகின்ற காலநிலை மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதற்கமைய நீண்ட நாள் மீன்பிடி படகுகள் மற்றும் சிறு மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்வதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னாரிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பிலும், யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையான கடற்பரப்பிலும் இன்றைய தினம் கொந்தளிப்பு ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் Reviewed by Admin on June 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.