அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 2 மாத எரிபொருள் மானிய முத்திரைகளை வழங்க கோரிக்கை.

கடற்தொழில் அமைச்சின் மூலம் கடல் தொழில் திணைக்களம் ஊடாக கடற்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மாணிய முத்திரை கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்தும் வழங்கப்படவில்லை எனவும்,இதனால் கடற்தொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாச தலைவர் எம்.எம்.ஆலம் தெரிவித்தார்.
 
 

மன்னார் மாவட்டத்தில் உள்ள கடற்தொழிலாளர்களுக்கு இந்த வருடம் மார்ச் மாதம் வரை மட்டுமே எரிபொருள் மாணிய முத்திரை வழங்கப்பட்டுள்ளது.
 

ஏப்ரல்,மே ஆகிய இரண்டு மாதங்களுக்கமாண எரிபொருள் மாணிய முத்திரை வழங்கப்படவில்லை.
 

இதனால் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.தற்போது வீசும் காற்றினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதீப்படைந்துள்ளது.
 

இதனையும் மீறி ஜீவனோபாயத்தை பெற்றுக்கொள்ள கடலுக்குச் செல்லும் இவர்கள் எரிபொருட்களை அதிகமாக பயண்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 

இந்த நிலையில் அரசு மீனவர்களுக்கு மாணியமாக வழங்கும் எரிபொருள் மாணிய முத்திரைகள் இவ் இரண்டு மாதங்களும் வழங்கப்படாமையினால் அந்த மீனவர்கள் சங்கம் மற்றும் உரவினர்களிடம் கடன் பெற்று கடலுக்குச் சென்று தொழில் செய்கின்றனர்.
 

-எனவே இவர்களின் இச்சுமையை குறைக்க விரைவாக இவ் மாணிய முத்திரைகளை கடல் தொழில் திணைக்களம் கடல் தொழில் அமைச்சிடம் இருந்து துரித கதியில் பெற்று மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக மன்னார் மாவட்ட கடல் தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் அவர்களுக்கு எழுத்து மூலம் கோறிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 2 மாத எரிபொருள் மானிய முத்திரைகளை வழங்க கோரிக்கை. Reviewed by NEWMANNAR on June 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.