அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளாங்குளம் மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட புதிய அம்புலன்ஸ் வண்டி மன்னார் பொது வைத்தியசாலையில் தடுத்து வைப்பு

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் மாவட்ட வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டி குறித்த வைத்தியசாலைக்கு வழங்கப்படாது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் வெள்ளாங்குளம் மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு கர்ப்பினித்தாய்மார் மேலதிக சிகிச்சைக்காக முழங்காவில் வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.ஆனால் அம்புலன்ஸ் வண்டி இல்லாததன் காரணத்தினால் முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்லப்பட்ட போது இரண்டு கர்ப்பினித்தாய்மார்களும் உயிரிழந்துள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
 

-இந்த நிலையில் பொது அமைப்புக்கள்,ஆலய நிர்வாக சவை ஆகியவை இணைந்து குறித்த பிரச்சினைகளை சுட்டிக்காட்டி சுகாதார அமைச்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தனர்.அதன் பிரகாரம் சுகாதார அமைச்சினால் பல மாதங்களுக்கு முன் புதிய அம்புலன்ஸ் வண்டி வெள்ளாங்குளம் மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.
 

-எனினும் குறித்த அம்புலன்ஸ் வண்டி வெள்ளாங்குளம் மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்கப்படாது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் மன்னார் பொது வைத்தியசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
 

இதனால் வெள்ளாங்குளம் மாவட்ட வைத்தியசாலைக்கு வரும் அவசரப்பிரிவு நோயாளர்களை வேறு வைத்தியசாலைக்கு மாற்ற முடியாத நிலையில் வெள்ளாங்குளம் மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

-குறித்த வைத்தியசாலையில் கனேசபுரம்,சேவா கிராமம்,வெள்ளாங்குளம்,தேவன் பிட்டி,புதுக்காடு,பாலியாறு,மூன்றம் பிட்டி,தேத்தாவாடி ஆகிய மீள் குடியேற்றக்கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்காண மக்கள் சிகிச்சைக்காக  சென்று வருகினறனர்.
 
-யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட குறித்த கிராம மக்கள் மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்ள அம்புலன்ஸ் வன்டி மிக முக்கியமானதாக காணப்படுவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

எனவே எமது கோரிக்கைக்கு அமைவாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட அதே அம்புலன்ஸ் வண்டியை மீண்டும் வெள்ளாங்குளம் மாவட்ட வைத்தியசாலைக்கு  ஒப்படைக்க வேண்டும் என அந்த மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளனர்.
 

-இது தொடர்பாக தேவன் பிட்டி பங்குத்தந்தை அருட்தந்தை றொக்சன் அவர்களை தொடர்பு கொண்டு கோட்ட போது,,,,
 

-வெள்ளாங்குளம் மாவட்ட வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டியை வைத்தியசாலைக்கு வழங்காது மன்னாரில் தடுத்து வைத்திருப்பதாக நான் அறிகின்றேன்.
 

இவ்விடையம் தொடர்பாக சுகாதார சுதேச வைத்திய அமைச்சின் வடமாகாண செயலாளர் எம்.பவித்திரன் அவர்களை தொடர்பு கொண்டு குறித்த பிரச்சினை தொடர்பாக கலந்தரையாடினேன்.
 

இதன் போது குறித்த புதிய அம்புலன்ஸ் வண்டியை அந்த வைத்தியசாலைக்கு வழங்க முடியாது எனவும்,பாதை சரியில்லை என அவர் தெரிவித்தார்.
 
 
 
வெள்ளாங்குளம் மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட புதிய அம்புலன்ஸ் வண்டி மன்னார் பொது வைத்தியசாலையில் தடுத்து வைப்பு Reviewed by NEWMANNAR on June 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.