முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி பிணையில் விடுதலை!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி எனப்படும் சிவகாமி சுப்ரமணியம் இன்று (26) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி உதயநகர் தங்கபுரத்தை சேர்ந்த தமிழினி இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின் 2009ம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதன் பின்னதாக தமிழினிக்கான புனர்வாழ்வு வவுனியா - பூந்தோட்டம் முகாமில் 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி ஆரம்பமானது.

இதன் பின்னணியில் இன்று (26) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி பிணையில் விடுதலை!
Reviewed by NEWMANNAR
on
June 26, 2013
Rating:

No comments:
Post a Comment