அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் 3 மீனவர்கள் உண்ணாவிரதம்

முல்லைத்தீவை சேர்ந்த மீனவர்கள் மூவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அந்த மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சுமார் 500 மீனவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


32 கடற்தொழிலாளர் சங்கங்களின் ஆதரவுடன் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாகவே  இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் அத்துமீறி நுழைந்து தொழில்; நடவடிக்கையில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்தல், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதை  தடுத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்த மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தாம் சொத்துக்களை அனைத்தையும் இழந்த நிலையில் மீள்குடியேற்றப்பட்டுள்ளோம். இந்நிலையில்,  வெளிமாவட்டங்களில் இருந்து முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் மீனவர்களினால் பெரும் நட்டங்களை தாம் எதிர்நோக்கியுள்ளதாகவும் அந்த மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியே மீனவர்களில் மூவர் உண்ணாவிரதப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 32 கடற்தொழிலாளர் சங்கங்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்தில் 500 இற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் பங்குகொண்டுள்ளனர்.

இந்தப் போராட்டம் தொடர்பில் கடற்றொழிலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு முந்திய காலத்தில் நாயாறு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான பிரதேசத்தில் 3000 இற்கும் மேற்பட்டவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டார்கள். தற்போது 600 பேர் மட்டுமே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிமாவட்டம் மற்றும் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி முறையும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதாலும் எமது கடல் வளங்கள் அழிவடைந்து செல்கின்றன.

இதன் காரணமாக இங்குள்ள மீனவர்கள் மாற்றுத்தொழிலை தேடவேண்டிய நிலை காணப்படுகின்றது. இவ்வாறு வெளிமாட்டங்களில் இருந்து அத்துமீறி நுழைந்தும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தியும் மீன்பிடிப்பதால் இரண்டு வருடங்களில் எங்கள் கடலில் மீன்வளம் அற்றுப்போகும் நிலை ஏற்படும். இதனை அரசாங்கம் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதனை அரசாங்கத்திற்கு வலியுறுத்துவதற்காகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.


முல்லைத்தீவில் 3 மீனவர்கள் உண்ணாவிரதம் Reviewed by Admin on July 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.