அண்மைய செய்திகள்

recent
-

தொலைபேசி மிரட்டல் வந்தால் முறையிடவும்

தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அச்சுறுத்தி கப்பம் பெறும் முயற்சிகள் அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறான அழைப்புக்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் அது குறித்து அறிகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.


தொலைபேசி மூலமாக பலரை அச்சுறுத்தி பணம் பறிப்பது தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், பொலிஸ் தலைமையகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் உட்பட பல பேரிடம் தொலைபேசி மூலம்  தொடர்பு கொண்டு, அவர்களை அச்சுறுத்தி பணம் பறிப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவ்வாறு, பணம் கேட்டு அச்சுறுத்தும் நபர்கள் பற்றி உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் அல்லது பொலிஸ் முறைப்பாட்டு பிரிவின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யவும்.

இவ்வாறு பணம் பறிக்கும் நபர்கள் தொடர்பில் இரகசிய பொலிஸார், பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதோடு சந்தேகநபர்களைக் கைது செய்வதான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மேற்கண்டவாறான தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில், அது குறித்து எவ்வித தயக்கமுமின்றி பொலிஸில் முறையிடவும். அல்லது கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கவும்.

011 - 2444480 அல்லது 011 - 2818283 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் தனது அறிக்கை மூலம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.


தொலைபேசி மிரட்டல் வந்தால் முறையிடவும் Reviewed by Admin on July 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.