அண்மைய செய்திகள்

recent
-

மெத்தாவினால் பாடசாலை மாணவர்களுக்காகவும் பொது மக்களுக்காகவும் நடாத்தப்படும் நடமாடும் சேவை.

மன்னார் வைத்தியசாலையில் இயங்கும் மெத்தா நிறுவனம் தனது 45ஆவது நடமாடும் சேவையை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை , வெள்ளாங்குளம்   அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் எதிர்வரும் 19.07.2013 நடாத்தவுள்ளது.



காலை 7.30 தொடக்கம் 10.30 வரை இலுப்பைக்கடவை பாடசாலையிலும் மதியம் 11.30 தொடக்கம் பிற்பகல் 4.30 வரை வெள்ளாங்குளம் பாடசாலையிலும் இச்சேவை பாடசாலை சிறார்களுக்கும் . ஆசிரியர்களுக்கும் அவ் ஊர் பொது மக்களுக்காகவும் நடாத்தப்படும்.


இதில் செயற்கை அவயவங்கள் பொருத்துவதற்கும் புதிய அவயவங்களுக்கு அளவு எடுக்கப்படும்.

கட்டைக்கால் பொலியோ போன்றவைக்கான விசேட பாதணிகளும் நடை பயிற்சியும் இலவசமாக வழங்கப்படும்.

இதை தொடர்ந்து 20.07.2013 -21.07.2013 சனி ஞாயிறு தினங்கனில் காலை 8.00 மணி தொடக்கம்  பிற்பகல் 4.00மணி வரை கிளிநொச்சி யA9 வீதியில் உள்ள கருணை நிலையத்தில் நடை பெறும்.

நடமாடும் சேவையில் கடந்த 5,6,7 தினங்களில் மாங்குளம், முல்லைதீவில் அளவெடுக்கப்பட்டவர்களுக்கு செயற்கை அவயங்கள் பொருத்தப்படுவதுடன் புதிய ஊனமுற்றவர்க்கும் அளவுகள் எடுக்கப்படும்.
தயவு செய்து அப்பகுதியில் உள்ள ஊனமுற்றவர்களுக்கு போதிய அறிவுறுத்தல் வழங்கவும்.


திரு. சின்கிலேயர் பீற்றர்
மெத்தா தொடர்பு அதிகாரி,
மெத்தா செயற்கை அவய நிறுவனம்
பொது வைத்தியசாலை. மன்னார்,
தொ. பே.  077-2131-652


மெத்தாவினால் பாடசாலை மாணவர்களுக்காகவும் பொது மக்களுக்காகவும் நடாத்தப்படும் நடமாடும் சேவை. Reviewed by Admin on July 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.