முல்லைத்தீவில் சிங்கள மீனவரை நேரில் வந்து வெளியேற்றுவேன் பிரதியமைச்சர் உறுதியளிப்பு -
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிமாவட்ட மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடை செய்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் மீனவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு நேற்று முன்தினம் கடற்றொழில் நீரியல்வள அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சின் பொதுசனத் தொடர்பு அதிகாரி பிரேம ஸ்ரீ பேரேராவினால் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சு எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் உண்ணாவிரத போராட்டத்தை கை விடுமாறும் கோரப்பட்டிருந்தது.
அதற்கு உண்ணாவிரதம் இருந்த மீனவர்கள், வெளிமாவட்ட மீனவர்கள் வெளியேற்றப்பட்டால் மாத்திரமே தாம் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவோம் எனத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடற்றொழில் நீரியல்வளத்துறை பிரதியமைச்சர் நாயாற்றில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சட்டவிரோத மீனவர்களைப் பொலிஸாரின் உதவியுடன் வெளியேற்றுமாறும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்துக்குத் தெரிவித்தார்.
நாயாற்றில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களை வேளியேற்றப் பொலிஸார் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினர் சென்ற போதும் அவர்களை வெளியேற்ற முடியவில்லை. இதன்பின்னர் கடற்றொழில் பிரதி அமைச்சர் தானே நேரடியாக வந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்களை ஒரு வாரத்தில் வெளியேற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் சிங்கள மீனவரை நேரில் வந்து வெளியேற்றுவேன் பிரதியமைச்சர் உறுதியளிப்பு -
Reviewed by Admin
on
July 10, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment