மன்னார் மாவட்ட மீனவர்கள் அன்று முதல் இன்று வரை பல வித துயரங்களை அனுபவித்து வருகின்றனர்- சமாச தலைவர் என்.எம்.ஆலம்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்ட மீனவர்கள் கடந்த காலத்தில் நிலவிய யுத்தம் காரணமாக பல வித துயரங்களை அனுபவித்தனர்.தமது உடமைகள்,தொழில் உபகரணங்கள்,குடியிருப்பு வீடுகள் அதற்கு மேலாக தமது உயிர்களையும் இழந்துள்ளனர்.
மேலும் இக்காலப்பகுதியில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை இவர்களின் தொழிலை பாரிய அளவில் பாதித்துள்ளது.இந்திய மீனவர்களின் டோலர் படகுகளினால் எமது மீனவர்களின் தொழில் உபகரணங்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலும் அக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த பாஸ் நடைமுறையின் காரணமாக மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் பாஸ் நடைமுறை தளர்த்தப்பட்டுள்ளது மீனவர்களுக்கு ஆறுதலாக காணப்படுகின்றது.
யுத்தம் முடிவடைந்த நிலையில் மீனவர்கள் தமது தொழிலை விருத்தி செய்து தமது குடும்பங்களை நிம்மதியாக வாழ வைக்க நினைக்கின்ற போதும் அவர்கள் எதிர்பார்க்கின்ற சூழல் இதுவரை அமையவில்லை.
யுத்த காலத்தில் இலங்கை கடற்பரப்பினுள் இந்திய இழுவைப்படகுகளின் வருகை குறைவடைந்த நிலையிலே காணப்பட்டது.
ஆனால் தற்போது இந்திய இழுவைப்படகுகளின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது.மன்னார் மாவட்ட மீனவர்கள் எது ஆழ் கடலில் வாரத்தில் செவ்வாய் ,புதன்,வெள்ளி ஆகிய 3 தினங்களில் மட்டுமே தொழிலுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
வேறு தினங்களில் தொழிலுக்குச் சென்றால் இந்திய மீனவர்களினால்எமது மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்கள் சேதப்படுத்தப்படுகின்றது.
கடல் தொழில் உபகரணங்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு மீனவர்களும் இன்று வரை பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை இழந்துள்ளனர்.ஆனால் அவர்களுக்கு எந்த இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை.
மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்திய இழுவைப்படகுகளின் வருகை நிறுத்தப்பட வேண்டும்.தடை செய்யப்பட்டுள்ள தொழில் முறைகள் எமது மாவட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும் .இதன் மூலம் எமது மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
மன்னார் மாவட்டத்தில் 32 மீனவர் சங்கங்களையும்,10 ஆயிரம் மீனவ குடும்பங்களையும் கொண்டதாகும்.மன்னார் மாவட்டத்தில் 3100 படகுகள் மாத்திரமே உள்ளதாகவும் மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாச தலைவர் என்.எம்.ஆலம் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மீனவர்கள் அன்று முதல் இன்று வரை பல வித துயரங்களை அனுபவித்து வருகின்றனர்- சமாச தலைவர் என்.எம்.ஆலம்
Reviewed by Admin
on
July 09, 2013
Rating:

No comments:
Post a Comment