அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயரை இரண்டு அமைச்சர்கள் நேரில் சென்று சந்திப்பு(படங்கள்)

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க குருக்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கும் இடையில் கடந்த 18 ஆம் திகதி கொழும்பில் இடம் பெற்ற சந்திப்பை தொடர்ந்து மன்னாரின் குறை நிறைகளை நேரில் சென்று பார்வையிடுவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இரண்டு அமைச்சர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னாருக்கு வருகை தந்தனர்.


 அமைச்சர்களான திஸ்ஸ கரலியத்த மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் நேற்று மாலை மன்னாருக்கு வருகை தந்த நிலையில் மாலை 6 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை மற்றும் குருக்களை சந்தித்து உரையாடியுள்ளனர்.

 மன்னார் மறைமாவட்ட ஆயர் இராய்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த 18 ஆம் திகதி 6 கத்தோலிக்க குருக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களை சந்தித்து மன்னாரில் காணப்படுகின்ற சட்டவிரோத மீள் குடியேற்றம்,பாகுபாடான வேலைவாய்ப்பு வழங்குகின்றமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் ஆயரை இரண்டு அமைச்சர்கள் நேரில் சென்று சந்திப்பு(படங்கள்) Reviewed by Admin on July 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.