மன்னார் ஆயரை இரண்டு அமைச்சர்கள் நேரில் சென்று சந்திப்பு(படங்கள்)
அமைச்சர்களான திஸ்ஸ கரலியத்த மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் நேற்று மாலை மன்னாருக்கு வருகை தந்த நிலையில் மாலை 6 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை மற்றும் குருக்களை சந்தித்து உரையாடியுள்ளனர்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராய்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த 18 ஆம் திகதி 6 கத்தோலிக்க குருக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களை சந்தித்து மன்னாரில் காணப்படுகின்ற சட்டவிரோத மீள் குடியேற்றம்,பாகுபாடான வேலைவாய்ப்பு வழங்குகின்றமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் ஆயரை இரண்டு அமைச்சர்கள் நேரில் சென்று சந்திப்பு(படங்கள்)
Reviewed by Admin
on
July 24, 2013
Rating:
No comments:
Post a Comment