அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீனவர்கள் 21 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 21 இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் கடந்த மாதம் 6 ஆம் திகதி கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.



 பொலிஸாரின் விசாரணைகளை தொடர்ந்து மன்னார் நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 பின்னர், இவர்கள் மீண்டும் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம், குறித்த மீனவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்திய மீனவர்கள் 21 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு Reviewed by Admin on July 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.