அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முருங்கன் பரிகாரிக்கண்டல் கிராமத்தில் முகமூடி அணிந்து துணிகரக்கொள்ளை.

மன்னார் முருங்கன் பரிகாரிகண்டல் கிராமத்தில் உள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முகமுடி அணிந்த இருவர் ஆயுத முனையில் நகைகளை அபகரித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் இன்று திங்கட்கிழமை காலை முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


முருங்கன் பரிகாரிகண்டல் கிராமத்தில் உள்ள ஜீவோதைய பண்ணைக்கு அருகாமையில் உள்ள வீடொன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் முகமூடி அணிந்து பாரிய கத்தியுடன் வீட்டினுள் நுழைந்த இருவர் அங்கிருந்த பெண்ணை அச்சுருத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுண் தங்கச்சங்கிலியை பலவந்தமாக அபகரித்து வீட்டின் பின் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியூடாக தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த வீட்டில் குறித்த பெண்ணும் வாய் பேச முடியாத அவருடைய கணவரும் இருந்த நிலையிலேயே குறித்த துணிகரக்கொள்ளை இடம் பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மன்னார் முருங்கன் பரிகாரிக்கண்டல் கிராமத்தில் முகமூடி அணிந்து துணிகரக்கொள்ளை. Reviewed by Admin on July 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.