வடக்கு காணி உரிமையாளர்கள் சார்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஆஜர்
தமது காணி அபகரிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி சுமார் 300 காணி உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்தநிலையில் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் மன்றில் ஆஜராகவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தீர்மானத்தை தமது சங்கத்தின் நிறைவேற்றுக்குழு விரைவில் நிறைவேற்றும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தமது 6.381 ஹெக்டேயர் காணிகள் அபகரிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ள காணி உரிமையாளர்கள், அதற்காக அரசாங்கத்தினால் 400 மில்லியன் ரூபாய்கள் நட்டஈடு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கு காணி உரிமையாளர்கள் சார்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஆஜர்
Reviewed by Admin
on
July 15, 2013
Rating:

No comments:
Post a Comment