ஊடக சுதந்திரம் குறித்து வெறும் உதட்டளவில் மட்டும் செயற்பட வேண்டாம் : பத்திரிகை ஆசிரியர் சங்கம் கண்டனம்
இது குறித்து மேற்படி சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பொது மக்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் குறித்து செய்தி சேகரிக்கவென அனுப்பப்பட்டிருந்த ஊடகவியலாளர்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தங்களின் கண் மூடித்தனமான தாக்குதலை புகைப்படங்கள் அல்லது காணொளியை எடுப்பதனைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அரசியலமைப்புக்கு முரணான வகையில் பாதுகாப்புப் படையினரால் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அங்கு குழுமியிருந்தோரை தடியடி மற்றும் ஆயுதப்பிரயோகம் செய்து கலைப்பதற்கு அவர்கள் ஆரம்பித்ததும், அடியுதைபட்டும் அச்சுறுத்தப்பட்டும் தூஷிக்கப்பட்டுமிருந்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
ஊடகவியலாளர்கள் அத்தருணத்தில் தங்களின் சட்டபூர்வத் தொழிலில் ஈடுபட்ட வண்ணமிருந்தனர். தங்கள் பணியைச் செவ்வனே செய்வதற்கென அவர்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள ஊடக அங்கீகார அட்டைகளை அவர்கள் சமர்ப்பித்திருந்த போதிலும் அவை பயனற்றவையாகவே இருந்தன.
இலங்கை வாழ் மக்களுக்கு தகவல் வழங்குவதிலான சட்ட சம்மதம் பெற்ற தங்களின் கடமையை நிறைவேற்றுவதிலிருந்து அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரால் அவர்கள் தடுக்கப்பட்டனர்.
மாகாண செய்தியாளர்களுள் ஒருவரான பெண் ஊடகவியலாளர் ஒருவர் பலவந்தமான முறையில் தள்ளப்பட்டு அச்சுறுத்தப்பட்ட நிலையில் வீடொன்றில் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக இத்தகைய பாதுகாப்புப்படையினரால் பலவந்தமாக பூட்டி வைக்கப்பட்டார். உருத்தோட்ட எனுமிடத்தில் இன்னுமொரு ஊடகவியலாளர் படையினரால் தாக்கப்பட்டதுடன் அவரது கமெராவும் அடித்து நொருக்கப்பட்டது.
தாக்குதலுக்குள்ளான அவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னரே அங்கிருந்து வீடு திரும்பினார்.
ஊடக சுதந்திரம் குறித்து வெறும் உதட்டளவில் மட்டும் செயற்பட வேண்டாமென நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். சர்வதேச ஊடகச் சுதந்திரம் சம்பந்தமான சுட்டியில் இலங்கை மிகவும் தாழ்வுற்ற நிலையிலேயே இருந்து வருவதுடன் ஊடகச் சுதந்திரம் மிகவும் கேவலமாக மதிக்கப்பட்டு வரும் நாடுகளுள் ஒன்றா கவும் கணிக்கப்பட்டுள்ளது. நாம் சாட்சி யம் கூறியுள்ளவாறு அரசாங்கத்தின் பணிப்புரைகளின் கீழ் பாதுகாப்புப் படை யினர் நடந்துகொண்ட விதம் அதன் துக்கம் தோய்ந்த இருண்ட பக்கத்தை வெளி ச்சமாக்கிட உதவப் போவதேயில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரம் குறித்து வெறும் உதட்டளவில் மட்டும் செயற்பட வேண்டாம் : பத்திரிகை ஆசிரியர் சங்கம் கண்டனம்
Reviewed by Admin
on
August 06, 2013
Rating:

No comments:
Post a Comment