காணாமல் போன மன்னார் பேசாலை மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு.
மன்னார் பேசாலையைச் சேர்ந்த எம்.ஜோசப் டியூரன் அப்புசாமி(வயது-26) மற்றும் கமால்டீன் சாமீன் (வயது-26) ஆகிய 2 மீனவர்களும் கடந்த 25 ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
இவர்கள் சில தினங்களாகியும் வீடு திரும்பாமை குறித்து இவர்களுடைய உறவினர்கள் கடந்த 28 ஆம் திகதி தலைமன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
இந்த நிலையில் நெடுந்தீவு கடற்கரையில் சடலம் ஒன்று ஒதுங்கிய நிலையில் அது காணமால் போன போசாலை மீனவர்களில் ஒருவரான எம்.ஜோசப் டியூரன் அப்புசாமி(வயது-26) என அடையாளம் காணப்பட்டது.
இந்த நிலையில் குறித்த மீனவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணியளவில் பேசாலையில் உள்ள அன்னாரது விட்டிற்கு கொண்டு வரப்பட்டு சிறிது நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மற்றைய மீனவர் தொடர்பான தகவல் எவையும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காணாமல் போன மன்னார் பேசாலை மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு.
Reviewed by Admin
on
August 03, 2013
Rating:

No comments:
Post a Comment