அனைவரும் தலைக்கவசம் அணியவேண்டும்.
வீதி விபத்துக்கள் அதிகம் இடம்பெறுவதால் தலைக்கவசம் அணியாமல் செல்லும் சந்தர்ப்பத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரும் தலைக்கவசம் அணியவேண்டும் எனவும் பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் தலைக்கவசம் அணியாமல் பாடசாலை மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அத்துடன் இரவு வேளைகளில் செல்வோர் துவிச்சக்கர வண்டிக்கு டைனமோ விளக்குப் பொருத்தி இருக்க வேண்டும் எனவும் பொதுமக்களிற்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
ஆகவே எதிர்வரும் காலங்களில் டைனமோ இல்லாமல் இரவு நேரங்களில் துவிச்சக்கர வண்டி செலுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அனைவரும் தலைக்கவசம் அணியவேண்டும்.
Reviewed by Admin
on
August 07, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment