அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 12 கட்சிகளும்,8 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுத்தாக்கல்.

எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் பிராந்திய ஊடகவியலாளர் அப்துல் சமீம் முஹம்மது பஸ்மி என்பவர் போட்டியிருகின்றார்.

 வடமாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சி நேற்று வியாழக்கிழமை காலை 10.51 மணியளவில் வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளது.

 ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட தலைமை வேட்பாளரும்,ஊடகவியலாளருமான அப்துல் சமீம் முஹம்மது பஸ்மி தலைமையில் இந்த வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதன் போது ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சின்னத்தம்பி பொன்னையா உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக மன்னார் மாவட்டத்தில் 12 கட்சிகளும்,8 சுயேட்சைக்குழுக்களும் மொத்தமாக 20 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 இதில் எந்த வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் 12 கட்சிகளும்,8 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுத்தாக்கல். Reviewed by Admin on August 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.