அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நா. விசாரணையை வலியுறுத்தி யாழில் கவனவீர்ப்புப் போராட்டம்; 27 ஆம் திகதி காணாமல்போனோரின் உறவுகள்

காணாமல்போனோர் தொடர்பில் ஐ.நாவின் விசாரணையை வலியுறுத்தி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழில் கவனவீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

காணாமல்போனோரைக் கண்டறியும் குழு, காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு ஆகியன உட்பட மேலும் சில சிவில் அமைப்புகள் இணைந்தே இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையை யயாட்டி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு இப்போராட்டம் நடைபெறும்.

இதன் பின்னர் காணாமல் போனோர் தொடர்பிலான 13 கோரிக்கைகள் அடங்கிய மனு நவநீதம்பிள்ளையிடம் கையளிக்கப்படும் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர் எஸ்.மகேந்திரன் நேற்று "உதயனி'டம் தெரிவித்தார்.

இதில் எழிலனின் மனைவியும், கூட்டமைப்பு வேட்பாளருமான ஆனந்தியும் கலந்து கொள்வார் எனத் தெரியவருகிறது.

காணாமல்போனோர் தொடர்பில் ஐ.நா. மட்டத்திலான விசாரணை அவசியம்.

இது விடயம் சம்பந்தமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கையை வலியுறுத்தவேண்டும் என்பது உட்பட முக்கிய சில கோரிக்கைகள் குறித்த மனுவின் ஊடாக முன்வைக்கப்படவுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் சிவில் அமைப்புகளைச் சந்தித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பேச்சு நடத்தவுள்ளார் என்றும் இந்தக் கலந்துரையாடலில் காணாமல்போனோர் தொடர்பிலான அமைப்புகள் பங்குபற்றும் என்றும் மகேந்திரன் குறிப்பிட்டார்.




ஐ.நா. விசாரணையை வலியுறுத்தி யாழில் கவனவீர்ப்புப் போராட்டம்; 27 ஆம் திகதி காணாமல்போனோரின் உறவுகள் Reviewed by Admin on August 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.