அண்மைய செய்திகள்

recent
-

ஆஸிக்கு ஆட்களை கடத்தும் கடற்படை வீரர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டும்!- கடற்படை தளபதி

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் நடவடிக்கையுடன் தொடர்புடைய கடற்படை வீரர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டும் என கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஒருசில கடற்படை வீரர்களின் இத்தகைய செயற்பாடுகளினால் கடற்படைக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக அட்களை கடத்தும் நடவடிக்கை தொடர்பில் அண்மையில் கைதானவர்களில் மூன்று கடற்படை வீரர்களும் அடங்கியிருந்தனர். குறித்த கடற்படை வீரர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கடற்படைத் தளபதி கூறியுள்ளார்.

 அவுஸ்திரேலியாவின் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக கடந்த ஒன்றரை வருடங்களில் கடல் மார்க்கமாக பயணித்த 3943 பேர் இதுவரை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சுமார் நுற்றுக்கும் அதிகமான படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 கடல் மார்க்கமாக இடம்பெறும் சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக கடற்படையின் கடல்ரோந்து சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளை தடுப்பதற்காக புலனாய்வுப் பிரிவுகளை பலப்படுத்துவதுடன், அதிவேகத் தாக்குதல் ரோந்து படகுகளை கடல் எல்லையில் அதிகளவில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே மேலும் தெரிவித்துள்ளார்.



ஆஸிக்கு ஆட்களை கடத்தும் கடற்படை வீரர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டும்!- கடற்படை தளபதி Reviewed by Admin on August 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.