அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசியத்தை பலப்படுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரியுங்கள்- தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் இருதய நாதன் சாள்ஸ்

கடந்த 30 வருடங்கள் பல்வேறு இன்னல்களை அடைந்த தமிழ் மக்கள் தமது சுய உரிமையையும்,சுய கௌரவத்தையும் பெற்றுக்கொள்ளும் தருணமாக வடமாகாண சபைத்தேர்தல் அமைந்துள்ள நிலையில் ஒட்டு மொத்த தமிழர்களும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பின் அணிதிரண்டு தமிழர்களின் பலத்தை இந்த அரசிற்கு வெளிப்படுத்த வேண்டும் என  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் இருதய நாதன் சாள்ஸ் தெரிவித்தார்.

-இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,,,

-நடைபெறவிருக்கும் வடமாகாண சபை தேர்தலை உலக நாடுகள் மிகவும் நுண்ணியமாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.

கடந்த 30 வருடங்களாக எமது தமிழ் மக்கள் பட்ட துன்ப,துயரங்களுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள இந்த வடமாகாண சபை தேர்தல் எமக்கு களம் அமைத்துள்ளது.

-தமிழ் மக்களின் சுய உரிமையை வென்றெடுக்க தமிழ் தேசியக்கூட்டமைப்பு அன்று முதல் இன்று வரை பல்வேறு போராட்டங்களில்  ஈடுபட்டு வருகின்றது.

வன்னியில் இடம் பெற்ற யுத்தத்தில் எமது மக்கள் பட்ட துன்ப,துயரங்களையும்,இழப்புக்களையும் எம்மால் கணக்கிட முடியாது.
-ஆனால் இந்த தேர்தலின் ஊடாக இறந்த உறவுகளின் கனவுகளை நினைவாக்க அணிதிரண்டு போராட முடியும்.

எமது மக்களை அடிமைகளாக்கி வேடிக்கை பார்க்கும் இந்த அரசிற்கு தமிழர்களின் பலம் என்ன என்று காட்ட வேண்டும்.

நாங்கள் சலுகைகளுக்கு அடிமைகளா கி விடக்கூடாது.மன்னார் மாவட்டத்தில் அரசினால் வழங்கப்படுகின்ற சகல வித வேலைத்திட்டங்களும் பக்கச்சார்புடன் இடம் பெற்று வருகின்றது.

வேலைவாய்ப்புக்களாக இருந்தாலும் சரி,வீட்டுத்திட்டங்களாக இருந்தாலும் சரி அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டுள்ளவர்களுக்கே வழங்கப்படுகின்றது.

 மன்னார் மாவட்டத்தில் நில அவகரிப்பு,கலாச்சார சீரழிவு,தமிழ் தேசியம்,மீள் குடியேற்றம்,காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல் போன்றவற்றிற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பை மென்மேலும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தின் தேவையில் உள்ளோம்.

-நாங்கள் தமிழினம் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.எமக்கு சுய கௌரவம் உள்ளது.

 எனவே தமிழ் மக்கள் இந்த வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரித்து தமிழ் மக்கள் பட்ட துன்ப துயரங்களில் இருந்தும்,தமிழர்கள் அடிமைகள் என்ற நாமத்தில் இருந்தும் விடுதலை பெற அனைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பை வெற்றியடையச் செய்ய வேண்டும் என வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட   வேட்பாளர் இருதய நாதன் சாள்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழ் தேசியத்தை பலப்படுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரியுங்கள்- தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் இருதய நாதன் சாள்ஸ் Reviewed by Admin on August 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.