அண்மைய செய்திகள்

recent
-

வேலை தேடி தலவாக்கலையிலிருந்து கொழும்பு வந்த 3 பெண்கள் வெளிநாட்டில்: குடும்­பத்தார் அதிர்ச்­சி

கொழும்­பிற்கு வீட்டு பணிப்பெண் வேலைக்­கென தல­வாக்­கலை பிர­தே­சத்­தி­லி­ருந்து அழைத்து வரப்­பட்ட மூன்று பெண்கள் குடும்­பத்­தா­ருக்கு தெரி­யாத வகையில் வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் குறித்த பெண்­க­ளி­னது குடும்­பத்தார் அதிர்ச்­சியும், குழப்­பமும் அடைந்­துள்ள அதே­வேளை இது தொடர்பில் தல­வாக்­கலை- லிந்­துலை பொலி­ஸா­ருக்கும், வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்­திற்கும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

பத்­தி­ரிகை ஒன்றில் வெளி­யான விளம்­ப­ரத்தை நம்­பியே மேற்­படி மூன்று பெண்­களும் கொழும்­பிற்கு வேலை­வாய்ப்பு தேடி வந்­துள்­ளனர். டீமலை, ட்ருப் , இரா­ணி­வத்தை ஆகிய தோட்­டப்­ப­கு­தியை சேர்ந்த குறித்த பெண்கள் 30,000 ரூபா மாத­சம்­பளம், உட­னடி வேலை­வாய்ப்பு என்ற பத்­தி­ரிக்கை விளம்­ப­ரத்­தினை நம்பி கொழும்­புக்கு வேலைக்கு வந்­துள்ள போது குறித்த வீட்டு உரி­மை­யா­ளர்கள் ஆசை­வார்த்­தை­களை காட்டி வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

மேற்­படி மூன்று பெண்­களும் வெளி­நா­டு­க­ளுக்கு சென்­றுள்­ள­மையை வெளி­நாட்டு வேலை வாய்ப்பு பணி­யகம் உறுதி செய்­துள்­ள­தோடு, அவர்கள் எந்த நாட்­டிற்கு அனுப்­பப்­பட்­டுள்­ளனர் , எங்கு உள்­ளனர் பற்­றிய தக­வல்கள் கிடைக்கப்பெறவில்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வேலை தேடி தலவாக்கலையிலிருந்து கொழும்பு வந்த 3 பெண்கள் வெளிநாட்டில்: குடும்­பத்தார் அதிர்ச்­சி Reviewed by NEWMANNAR on August 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.