அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இறைச்சிக்கடைக் கொள்ளை... விலை நிர்ணயக் குழு என்ன செய்கிறது?

மன்னாரில் இறைச்சி கொள்வனவு செய்கின்ற பொதுமக்கள் அனைவரும் மனங்களில் பொருமிக்கொண்டிருக்கின்ற விடையத்தை முற்றுப்புள்ளி வைக்க விரும்பியே இதை பிரசுரிக்கின்றோம்  ஆக்கபூர்வமான கருத்துக்களை மட்டும் பகிருங்கள்.

மன்னாரின் பொதுசந்தையில் அமைந்துள்ள மாட்டுஇறைச்சிக் கடையிலும், நூறுவீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள இறைச்சிக்கடையிலும் நீண்டகால அவதானிப்பின் அடிப்படையில் நகரசபை துணைபோகின்ற அல்லது கண்மூடித்தனமாக இருக்கின்ற சில முக்கிய பிரச்சினைகள் இத்தால் வெளிக்கொணரப்படுகின்றது.

01. மன்னார் பொதுசந்தையில் அமைந்துள்ள இறைச்சிக்கடையில்... நிறைசுரண்டல் தொடர்பானது...
நீண்டகாலமாக படிஎடை தராசில் நிறுக்கப்பட்டு வந்த இறைச்சியானது

இறைச்சியின் நிறை + முள்ளின் நிறை + எறிகின்ற வேகத்தில் திராசின் தளம்பல் = தனி இறைச்சி 500 ரூபா.

800g இறைச்சி + 300g முள்ளு + எறிகின்ற வேகத்தளம்பல் 50g = 1kg தனி இறைச்சி.

இது எந்தவகையில் நியாயம் என்று உரியவர்கள் சிந்திக்க வேண்டும்.

தற்போது இலத்திரனியல் தராசில்...
இறைச்சியின் நிறை + முள்ளின் நிறை + சவ்வு அல்லது ஏதோ கழிவு = தனி இறைச்சி 500 ரூபா.

இதை தட்டிக்கேட்கப்போனால் இரு கத்திகளை உரசியபடி அது நல்ல இறைச்சி என்கிற பதில்...

விலை நிர்ணயக் குழு என்ன செய்கிறது?

அரைக்கிலோ இறைச்சி 300ரூ. கேட்டால் 300 ரூபாவிற்கு போட்டிருக்கு என்ற பதில்.

விலைப்பட்டியலில் தனி இறைச்சி 450 ரூபா முள்ளிறைச்சி 400 ரூபா என்று போடப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்பிற்கா?

நுகர்வோர் சங்கங்கள் அமைக்கப்படவேண்டிய கட்டாயம் இப்போது உணரப்படுகின்றது...

2 கிலோ தனி ஈரலை இலஞ்சமாக பெறுகின்ற அன்பர்களுக்கு ஒரு அன்பான அறைகூவல்... இதே ஈரலை நுகர்வோர் சங்கள் உங்களுக்கு தரும். நீங்கள் உங்கள் கடமையில் கண்டிப்பாக இருங்கள்..! —

Flash Shathees


மன்னாரில் இறைச்சிக்கடைக் கொள்ளை... விலை நிர்ணயக் குழு என்ன செய்கிறது? Reviewed by NEWMANNAR on September 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.