அண்மைய செய்திகள்

recent
-

சர்வதிகாரிகள் யாரும் தேர்தலை நடத்துவதில்லை: ஜனாதிபதி

சர்வாதிகாரிகள் எவரும் ஜனநாயக முறையிலான தேர்தல்களை நடத்துவதில்லை மாறாக தமது விருப்பங்களுக்கேற்பவே செயலாற்றுவர். ஆனால் எமது அரசாங்கம்  வடக்கில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்தி மகாணசபை தேர்தலை நடத்துகின்றது. சர்வதிகார ஆட்சி நடக்கின்றது என எவரும் எம் மீது குற்றம் சுமத்த முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருநாகலில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 62 ஆவது ஆண்டுவிழாவில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


வெளிநாட்டு அழுத்தங்களுக்கோ, உள்நாட்டு சதிகளுக்கோ தாம் அடிபணியப் போவதில்லை. ஜனநாயகத்தை காக்கவும், வெளிநாட்டு அழுத்தங்களை முறியடிக்கவும் அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும். 

ஜனநாயகத்துக்கு எதிரான பாதையிலோ, எதேச்சாதிக்காரப் பாதையிலோ செல்லும் நோக்கம் எனக்கோ, எனது அரசாங்கத்துக்கோ இல்லை. இலங்கையைப் போன்று ஆசியாவில் வேறெந்த நாட்டிலும் இந்தளவுக்கு தேர்தல்கள் நடக்கவில்லை. 

2005இல் ஆட்சிக்கு வந்த பின்னர், எமது அரசாங்கம் 11 தேர்தல்களை நடத்தியுள்ளது. விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துள்ளது. இதைவிட வேறென்ன ஜனநாயகம் உள்ளது? சிலர் என்னை எப்படியாவது ஆட்சியில் இருந்து அகற்ற முனைகின்றனர் என்றார்.
சர்வதிகாரிகள் யாரும் தேர்தலை நடத்துவதில்லை: ஜனாதிபதி Reviewed by NEWMANNAR on September 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.