இந்திய மீனவர்கள் தமது படகுகள் இன்றி நாடு திரும்புகின்றனர்: தெ ஹிந்து
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழகத்தின் காரைக்கால் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய இடங்களை சேர்ந்த 34 மீனவர்களும் இன்று தமிழகம் திரும்பவுள்ளனர்.
செப்டம்பர் 3 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அமைய இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் தமது 5 படகுகள் இன்றியே நாடு திரும்பவுள்ளதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அவர்கள் காங்கேசன்துறையில் உள்ள தமது படகுகள் இன்றி நாடு திரும்பமுடியாது என்று மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக தகவல்களின்படி 34 மீனவர்களும் இன்று முபகல் 10 மணிக்கு சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படை கப்பலிடம ஒப்படைக்கப்படவுள்ளனர்
.
இதன்பின்னர் மாலை 5 மணிக்கு மண்டபத்தில் வைத்து காரைக்கால மீன்பிடித்துறை அதிகாரிகள் அவர்களை கையேற்கவுள்ளனர். இவர்கள் கடந்த 30 ஆம் திகதியன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்திய மீனவர்கள் தமது படகுகள் இன்றி நாடு திரும்புகின்றனர்: தெ ஹிந்து
Reviewed by Admin
on
September 21, 2013
Rating:
No comments:
Post a Comment