மன்/பிரதேச வைத்தியசாலை. முருங்கனில் திரு இருதய ஆண்டவர் ஆலய அடிக்கல் நாட்டல்-படங்கள்
மேற்படி நிகழ்வானது 15.09.2013 அன்று மன்னார் மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை தலைமையில் பிற்பகல் 4.00 மணியளவில் ஆரம்பமானது.
இதில் முருங்கன் பங்குத்தந்தை அருள்ராஜ் குரூஸ் அடிகளாரும், மாவட்ட வைத்திய அதிகாரி டாக். ஓஸ்மன் சாள்ஸ் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திசபை உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் போன்றோரும் கலந்து கொண்டனர்.
மேலும்; திரு இருதய ஆண்டவர் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதன் கட்டுமானப்பணிகளுக்கு இயலுமானவர்கள் தங்களால் முடியுமான ( பொருள், பணம் ) உதவிகளை நல்குமாறு வைத்தியசாலை கமூகம் சார்பாக தயவாக கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு முருங்கன் பங்குத்தந்தையை நாடவும்.
மாவட்ட வைத்திய அதிகாரி,
பிரதேச வைத்தியசாலை.
முருங்கன்.
மன்/பிரதேச வைத்தியசாலை. முருங்கனில் திரு இருதய ஆண்டவர் ஆலய அடிக்கல் நாட்டல்-படங்கள்
Reviewed by Admin
on
September 19, 2013
Rating:

No comments:
Post a Comment