நாட்டில் காற்றுடன் கூடிய பலத்த மழை நீடிக்கும்
நாட்டின் பல பாகங்களிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பலத்த மழை காணப்படலாம்.
இதேநேரம் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றருக்கும் அதிகமாக காற்று வீசக்கூடும் என்பதால் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
இதனால் கடலில் பயணிப்போர், மீனவர்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அந் நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் காற்றுடன் கூடிய பலத்த மழை நீடிக்கும்
Reviewed by Admin
on
September 18, 2013
Rating:

No comments:
Post a Comment