அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியிலிருந்து மாத்தறை வரை புகையிரத சேவையை வழங்க ஏற்பாடு

மாத்­த­றையில் இருந்து அனு­ரா­த­புரம் வரை வார இறுதி நாட்­களில் சேவையில் ஈடு­பட்­டு­வந்த புகை­யி­ரத சேவையை கிளி­நொச்சி வரை விஸ்­த­ரிப்­ப­தற்கு புகை­யி­ரத திணைக்­களம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

 இத­ன­டிப்­ப­டையில் சனிக்­கி­ழமை காலை 7.00 மணிக்கு மாத்­த­றை­யி­லி­ருந்து புறப்­படும் புகை­யி­ரதம் முற்­பகல் 9.50 மணிக்கு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­தையும் பிற்­பகல் 3.50 மணிக்கு கிளி­நொச்சி புகை­யி­ரத நிலை­யத்­தையும் சென்­ற­டை­ய­வுள்­ளது.

 கிளி­நொச்­சியில் ஞாயிற்­றுக்­கி­ழமை முற்­பகல் 11 மணிக்கு பய­ணத்தை ஆரம்­பிக்கும் புகை­யி­ரதம் மாலை 5.15 மணிக்கு கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­தி­னையும் இரவு 7.15 மணிக்கு மாத்­தறை புகை­யி­ரத நிலை­யத்­தையும் சென்­ற­டை­ய­வுள்­ளது.

 வடக்கு தெற்கு உறவு பால­மாக இந்த போக்குவரத்து சேவை செயற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியிலிருந்து மாத்தறை வரை புகையிரத சேவையை வழங்க ஏற்பாடு Reviewed by Admin on September 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.