அண்மைய செய்திகள்

recent
-

சிறை அதி­கா­ரி­களின் மனி­தா­பி­மா­ன­மற்ற செயலே பிரான்ஸிஸ் நெல்­சனின் மர­ணத்­துக்கு கார­ண­ம்: ஆனந்தசங்கரி

சிறை அதி­கா­ரி­களின் மனி­தா­பி­மா­ன­மற்ற செயலே பிரான்ஸிஸ் நெல்­சனின் மர­ணத்­துக்கு கார­ண­மாகும் அவர்க­ளுக்கு இருந்த அதி­கா­ரத்தை முறை­யாக பிர­யோ­கிக்க தவ­றி­ய­மையாலேயே இந்த மரணம் சம்­ப­வித்­தி­ருக்­கி­றது. எனவே சிறை அதி­கா­ரி­களை குற்­ற­வா­ளி­க­ளாக கரு­து­கிறேன் என கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது
நேற்றுக் காலை மகசின் சிறைச்­சா­லையில் மர­ண­ம­டைந்த 31 வய­தை­யு­டைய தமிழ் அர­சியல் கைதி பிரான்ஸிஸ் நெல்சன் தனது இரு பிள்­ளை­க­ளையும், பொரு­ளா­தார ரீதி­யாக மிகவும் நலி­வுற்­றுள்ள தனது மனை­வியின் பொறுப்பில் விட்­டுச்­சென்­றுள்ளார்.

2006ம் வருடம் முதல் ஏறக்­கு­றைய ஏழாண்­டுகள் சிறையில் தனது வாழ்க்கை காலத்தை கழித்த எம் தமிழ் உற­வான அப்­பாவி தமிழ் இளை­ஞ­னுக்கு வேண்­டிய மருத்­துவ வச­தி­களை சிறை அதி­கா­ரிகள் உரிய நேரத்தில் வழங்­கி­யி­ருந்தால் குறித்த இளை­ஞனின் உயிரை காப்­பாற்­றி­யி­ருக்க முடியும்.

அவரின் உடலின் பல பாகங்­க­ளிலும் எறி­கணை சிதறல் துண்­டு­களும், துப்­பாக்கி சன்­னங்­களின் துகள்­களும் இருந்­தமை உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த ஒரே ஒரு காரணம் மட்டும் போதும் பிரான்ஸிஸ் நெல்­சனை அரசு விடு­தலை செய்­வ­தற்கு.

இந்த ஏழாண்­டு­களும் உடலில் வலியை சுமந்து கொண்டு அவர் பட்ட அவஸ்­தை­களும், துன்­பங்­களும் வார்த்­தை­களால் விவ­ரிக்க முடி­யா­தவை. சிறை அதி­கா­ரிகள் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கத்­த­வ­றி­யதன் விளை­வா­கவே இன்று இந்த துன்­பியல் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. மனி­தா­பி­மா­ன­மற்ற செயலால் எம் சகோ­த­ரனின் மரணம் நிகழ்ந்­தி­ருப்­பதால் பிரான்ஸிஸ் நெல்­சனின் மர­ணத்­துக்கு சிறை அதி­கா­ரிகள் பொறுப்­பேற்­றே­யாக வேண்டும்.

குறித்த இளை­ஞனின் மனைவி தனது இரு பிள்­ளை­க­ளையும் பரா­ம­ரிக்க முடி­யாத கையறு நிலையில் இன்று நிற்­கின்றார். இந்த மர­ணச்­சம்­ப­வத்தை அந்த இரு சிறு பிள்­ளை­க­ளுக்கும் எதி­ராக இழைக்­கப்­பட்ட அநீ­தி­யா­கவே, கொடூ­ர­மான செய­லா­கவே நான் பார்க்­கின்றேன். மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யி­லேனும் தேவை­யான மருத்­துவ வச­தி­களை வழங்­கி­யி­ருக்­கலாம். இல்லை அவரை விடு­வித்­தி­ருக்­கலாம். சிறை அதி­கா­ரி­க­ளுக்கு இருந்த அதி­கா­ரத்தை முறை­யாக பிர­யோ­கிக்க தவ­றி­ய­மையால் பிரான்ஸிஸ் நெல்­சனின் மரணம் சம்­ப­வித்­தி­ருக்­கி­றது. எனவே சிறை அதி­கா­ரி­களை குற்­ற­வா­ளி­க­ளாக நான் கரு­து­கிறேன்.

பிரான்ஸிஸ் நெல்­சனின் உடலை அவ­ரு­டைய மனைவி மற்றும் உற­வி­னர்­க­ளிடம் உட­ன­டி­யாக கைய­ளிக்க வேண்­டு­வ­தோடு, அவர்­க­ளது இரு பிள்­ளை­க­ளையும் பரா­ம­ரிக்க, கல்­வித்­தே­வையை பூர்த்தி செய்ய வசதி இன்­மையால் அவ­ரது மனை­விக்கு உரிய நஸ்­ட­ஈட்டை வழங்­கு­மாறு வலி­யு­றுத்­து­கின்றேன். மேலும் பல தமிழ் அர­சியல் கைதிகள் பிரான்ஸிஸ் நெல்­ச­னைப்­போன்றே உடலில் வெடி­பொ­ருள்­களின் எச்­சங்­களை தாங்­கி­ய­வாறு, ஜீர­ணிக்க முடி­யாத அவ­லங்­க­ளோடு, மருத்­துவ வச­தி­க­ளுக்­காக ஏங்­கி­ய­வாறு இருப்­ப­தாக தகவல் கிடைத்­தி­ருப்­பதால், உட­ன­டி­யாக நியா­ய­மாக செயல்­ப­டக்­கூ­டிய அதி­கா­ரி­க­ளைக்­கொண்ட குழுவை நிய­மித்து தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய அல்­லது வேறு ஏதேனும் மாற்று நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு சிபா­ரிசு செய்­கின்ற அதி­காரம் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டுதல் வேண்டும்.

இனியும் இத்­த­கைய கொடூ­ர­மான மரணங்கள் சம்பவிக்காமல் இருக்க, தமிழ் அரசியல் கைதிகள் எனும் ஒரே காரணத்துக்காக தாம் விரும்பிய எதையும் கேட்க முடியாத நிலையில் அடக்குமுறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்து, அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென நான் அரசை வலியுறுத்துகின்றேன்.
சிறை அதி­கா­ரி­களின் மனி­தா­பி­மா­ன­மற்ற செயலே பிரான்ஸிஸ் நெல்­சனின் மர­ணத்­துக்கு கார­ண­ம்: ஆனந்தசங்கரி Reviewed by NEWMANNAR on September 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.