அண்மைய செய்திகள்

recent
-

பிள்ளைகளுக்கு நீராவி பிடிப்பதை தவிர்க்குமாறு சுகாதார பிரிவு வேண்டுகோள்

பல்வேறு சளி சார்ந்த சுவாச கோளாறுகள் ஏற்படும் போது, பிள்ளைகளுக்கு நீராவி பிடிப்பதை தவிர்க்குமாறு சுகாதார பிரிவு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீராவி பிடிப்பதனால் பிள்ளைகளின் சளி நோயை கட்டுப்படுத்த முடியாது என ருஹூனு பல்கலைக்கழகத்தின் சிறுவர் நோய் தொடர்பான பேராசிரியர் சுஜீவ அமரசேன கூறினார்.

இதனால் பிள்ளைகளுக்கு தீக்காயங்கள் ஏற்படுவதாகவும், உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.

கொழும்பு வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் 16 வயதுக்கு குறைவான அதிக பிள்ளைகள், நீராவி பிடிப்பதனால் ஏற்படும் தீக்காயங்களுக்காகவே அனுமதிக்கப்படுவதாக ருஹூனு பல்கலைக்கழகத்தின் சிறுவர் நோய் தொடர்பான பேராசிரியர் சுஜீவ அமரசேன மேலும் கூறினார்.
பிள்ளைகளுக்கு நீராவி பிடிப்பதை தவிர்க்குமாறு சுகாதார பிரிவு வேண்டுகோள் Reviewed by NEWMANNAR on September 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.