அண்மைய செய்திகள்

recent
-

போனஸ் ஆச­னங்­களில் ஒன்றை மன்­னாரில் இந்து மத உறுப்­பினர் ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும் என கோரிக்கை விடப்­பட்­டுள்­ளது.

பதவிகளுக்கான போட்டிகளில் எங்கள் மக்களினது தீர்ப்பை நாங்கள் மாசுபடுத்தக் கூடாது. எனவே அனைவரும் கலந்து பேசி பதவிகளைப் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு சேவையாற்றவேண்டும் என்பதே கூட்டமைப்பின் அபிலாசையாகும். மக்களுடைய எதிர்பார்ப்புக்களையும் திடசங்கற்பங்களையும் பதவிகளுக்காக சீர் குலைக்கக் கூடாது. இப்படியொரு சந்தர்ப்பத்தை நான் நிருபித்துக்காட்டியிருக்கிறேன். இதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.என்னைப் பின்பற்றுங்கள் என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா.

கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாண சபைக்­கான அமைச்சுப் பத­விகள் குறித்து கருத்துத் தெரி­விக்­கும்­போது இவ்­வாறு கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இரு போனஸ் ஆச­னங்­களில் ஒன்றை முஸ்லிம் உறுப்­பினர் ஒரு­வ­ருக்கு வழங்­கு­வது தொட ர்பில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. மற்­றைய ஆச­னத்தை சுழற்சி அடிப்­ப­டையில் வரு­டத்­திற்கு ஒருவர் என்ற ரீதியில் வழங்­கு­வது தொடர்­பிலும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் நான்கு விட­யங்கள் கருத்தில் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

அதா­வது, முல்­லைத்­தீவு, ஒட்­டு­சுட்டான், துணுக்காய், மாந்தை வரை உறுப்­பினர் ஒருவர் இல்­லாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. அதே­போன்று மன்­னாரில் இந்து மத உறுப்­பினர் ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும் என கோரிக்கை விடப்­பட்­டுள்­ளது. மேலும் பெண்கள் சார்பில் போதிய பங்­க­ளிப்பு இல்­லா­தி­ருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

அதே­போன்று மலை­யகத் தமிழர் ஒரு­வ­ருக்கு இட­ம­ளிக்­கப்­பட வேண்டும் எனவும் கோரப்­ப­டு­கின்­றது. இவை யாவும் கருத்தில் கொள்­ளப்­படும்.

மேலும் நாளை திங்­கட்­கி­ழமை இது தொடர்பில் முடிவு எடுப்­ப­துடன் முத­ல­மைச்சர் யார் முன்­னி­லையில் சத்­தியப் பிர­மாணம் செய்­வது என்­பது தொடர்­பிலும் தீர்­மா­னிக்­கப்­படும் என்று நாடா­ளு­மன்ற உறுப் ­பினர் மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

அர­சாங்­கத்தின் கடந்த நான்கு ஆண்டு கால சர்­வா­தி­காரப் போக்கை ஏற்­காத தமிழ் மக்­களின் வாழ்­வு­ரி­மை­யையும் ஜன­நா­யக ரீதி­யான அடிப்­படை உரி­மை­க­ளையும் அவர்­க­ளு­டைய அர­சியல் ஆட்சி உரி­மை­யையும் ஏற்­காத அர­சுக்கு எதி­ரா­கத்தான் மக்கள் வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றார்கள். இந்தத் தேர்­தலில் தனிப்­பட்ட முறையில் வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றார்கள் என்­ப­தை­விட ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களும் வட மாகாண சபைத் தேர்­தலில் அர­சுக்கு எதி­ரா­கவே வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றார்கள் என்­பதே உண்மை.

அர­சாங்­கமும் சர்­வ­தேச சமூ­கமும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாகாண சபைக்கு 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் கீழ் வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களை அர­சாங்கம் ஏற்­க­னவே பறித்­தெ­டுத்­து­விட்­டது. வட மாகாண சபைத் தேர்தல் வந்­ததும் பொலிஸ் அதி­கா­ரங்­க­ளையோ காணி அதி­கா­ரங்­க­ளையோ இந்த மாகாண சபைக்கு வழங்க மாட்டோம் என்று சிங்­கள தீவி­ர­வாத, பௌத்த தீவி­ர­வாத அமைப்­புக்­களும் அறிக்­கை­களை விடுப்­ப­தை­விட போராட்­டங்­க­ளையும் நடத்தி வரு­கின்­றன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் அறிக்­கைக்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு தொடுத்­தி­ருக்­கின்­றார்கள். நாங்கள் இந்த நாட்டில் ஐக்­கிய இலங்­கைக்குள் வடக்கு, கிழக்கு இணைந்த மாநி­லத்தில் தன்­னாட்சி அதி­காரம் மிக்க ஒரு மாநில ஆட்­சியைக் கோரு­கின்றோம். இந்த கோரி க்கை சர்­வ­தே­சத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்ற உள்­ளக சேத உரி­மைகள் தத்­து­வத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தாகும். இன்று இருக்கும் ஒற்­றை­யாட்சி அமைப்­புக்குள் அதி­காரப் பகிர்வு என்­ப­தற்கு அர்த்­த­மில்லை. இந்த அர­சி­ய­ல­மைப்பு அதி­கார பகிர்வை அனு­ம­திக்­காது. இதைப் போலவே 13 ஆவது திருத்தச் சட்டமும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர் வாக அமையாது. சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் குறிப்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உடன்பாடுகள் தொடர்பான அறிக்கைகளிலும் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று அர்த்த முள்ள அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்று மிகத் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது என்றார்.
போனஸ் ஆச­னங்­களில் ஒன்றை மன்­னாரில் இந்து மத உறுப்­பினர் ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும் என கோரிக்கை விடப்­பட்­டுள்­ளது. Reviewed by NEWMANNAR on September 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.