அண்மைய செய்திகள்

recent
-

மரம் முறிந்து விழுந்ததில் இலங்கை அகதி மரணம்

தமிழ்நாடு பவானிசாகரில் பெய்த பலத்த மழையினால் மரம் முறிந்து விழுந்து இலங்கை அகதியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் நேற்றுமுன்தினம் நீண்ட நாட்களுக்கு பிறகு பலத்த மழை பெய்துள்ளது.

இந்நிலையில், பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் சுப்பிரமணி ( வயது 43) மற்றும் மாரிமுத்து (வயது 60) ஆகிய இருவரும் இரவு பணியை முடித்துவிட்டு, ஒன்பது மணியளவில் பவானிசாகர் அருகே உள்ள முடுக்கன்துறையில் இருந்து இலங்கை அகதிகள் முகாம் நோக்கி நடந்து வந்துள்ளனர்.

அப்போது தென்னை வித்து ஆராய்ச்சி நிலையம் அருகே வரும்போது வீதியருகில் நின்ற இருந்த வாகை மரம் ஒன்று திடீ
ரென சுப்பரமணி மற்றும் மாரிமுத்து மீது முறிந்து விழுந்தது.

இச்சம்பவத்தில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மாரிமுத்து கால் முறிந்து கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் பொலிஸார் விசாரணை செய்து வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மரம் முறிந்து விழுந்ததில் இலங்கை அகதி மரணம் Reviewed by Admin on September 04, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.