மூழ்கிய படகிலிருந்து 13 பேர் காப்பற்றப்பட்டனர்: 5 சடலங்கள் மீட்பு
மன்னார்,பலுகஹதுரற பிரதேசத்தில் மூழ்கி விபத்துக்குள்ளான படகிலிருந்து 13 பேர் காப்பற்றப்பட்டதுடன் 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்
.
தலங்கமையிலிருந்துவில்பத்துவவிற்கு சுற்றுலா சென்றவர்களே இந்த விபத்தில் பலியாகியுள்ளனர் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர். 8 பேர் பயணிக்க வேண்டிய படகில் 18 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், சரியாக எத்தனை பேர் பயணித்தனர் என்று தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
அளவுக்கதிமான நபர்களை ஏற்றிச்சென்றமையினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
மூழ்கிய படகிலிருந்து 13 பேர் காப்பற்றப்பட்டனர்: 5 சடலங்கள் மீட்பு
Reviewed by Admin
on
October 06, 2013
Rating:

No comments:
Post a Comment