அண்மைய செய்திகள்

recent
-

காணி­க­ளுக்­கு­ரிய ஆவ­ணங்­களை வழங்­கா­விடின் நாம் சாகும் வரையில் உண்­ணா­வி­ர­த­மி­ருப்போம்: நாவற்­குழி மக்கள்

யாழ். நாவற்­குழிப் பகு­தியில் வசிக்­கின்ற தமிழ் மக்கள் தமது காணி­களை அளந்து அதற்­கு­ரிய ஆவ­ணங்­களை உட­ன­டி­யாக வழங்­க­வேண்டும் எனவும் தவறின் தாம் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டங்­களில் ஈடு­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­தனர். தமக்­கு­ரிய காணி­களை அளந்து ஆவ­ணங்கள் வழங்­கப்­படும் என இரா­ணு­வத்­தினர் தெரி­வித்து வரு­கின்ற பொழுதும் அர­சாங்க அதி­கா­ரி­களும் சில அர­சி­யல்­வா­தி­களும் திட்­ட­மிட்ட வகையில் காணி­களை வழங்காது காலம் தாழ்த்­து­வ­தா­கவும் தெரி­வித்­தனர். 

இவ்­வி­டயம் தொடர்­பாக அப்­ப­குதி மக்கள் மேலும் தெரி­விக்­கையில், நாங்கள் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக இப்­ப­கு­தியில் மீளக்­கு­டி­யே­றி­யுள்ளோம். எமக்கு இப்­ப­கு­தியில் குறித்த காணி­களில் வசிப்பதற்கான அனுமதியை கிராம சேவை­யாளர் வழங்­கி­யுள்ளார். கடந்த நான்கு வரு­டங்­க­ளாக எமது காணி­களை அளந்து ஆவ­ணங்­களை வழங்­காது அர­சாங்க அதி­கா­ரி­களும் தொடர்­பு­டைய அர­சி­யல்­வா­தி­களும் காலம் தாழ்த்தி வரு­கின்­றனர். 

ஆனால், எமக்கு அருகில் தற்­பொ­ழுது குடி­யே­றி­யுள்ள சிங்­கள மக்­க­ளுக்கு இரா­ணு­வத்­தி­னரும் பொலி­ஸாரும் பாது­காப்பு வழங்­கு­வ­துடன் காணிகள் அளக்­கப்­பட்டு அதற்­கு­ரிய ஆவ­ணங்­களும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. கடந்த காலங்­களில் இப்­ப­கு­தியில் ஐந்து சிங்­களக் குடும்­பங்கள் மட்டும் வசித்து வந்த நிலையில் தற்­பொ­ழுது சுமார் நூறு வரை­யான குடும்­பங்கள் மீள்­கு­டி­யே­றி­யுள்­ளன. இவர்­களில் சக­ல­ருக்கும் காணி­க­ளுக்­கு­ரிய ஆவ­ணங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. 

இந்­நி­லையில் எமக்கு மின்­சாரம், குடிநீர், போக்­கு­வ­ரத்து வச­திகள் எது­வு­மின்றி கஷ்­டங்­களை எதிர்­கொண்டு வரு­கின்ற நிலையில் அரு­கி­லுள்ள சிங்­களக் குடி­யேற்­றத்தில் வசிப்­போ­ருக்கு சகல வச­தி­களும் இரா­ணு­வத்தின் ஏற்­பாட்டில் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன. காணி­களை அளந்து ஆவ­ணங்­களை எமக்கும் வழங்­கு­மாறு அர­சாங்க அதி­கா­ரி­க­ளிடம் நாம் கோரி­யுள்ளோம். ஆனால் யாருமே எமக்கு உத­வ­வில்லை. 

நேற்றுகாணி­களை அளந்து வழங்­கு­வ­தாக இரா­ணு­வத்­தினர் எம்­மிடம் தெரி­வித்­தனர். ஆனால், எந்தவொரு அதிகாரியும் இவ்விடத்துக்கு வரவில்லை. எனவே, எமக்கான காணிகளுக்குரிய ஆவணங்களை விரைவில் வழங்க சம் பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறின் நாம் சாகும் வரையிலான போராட்டங்களில் ஈடுபட வுள்ளோம் என்றனர்.
காணி­க­ளுக்­கு­ரிய ஆவ­ணங்­களை வழங்­கா­விடின் நாம் சாகும் வரையில் உண்­ணா­வி­ர­த­மி­ருப்போம்: நாவற்­குழி மக்கள் Reviewed by Admin on October 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.