தலை மன்னார் கடற் பகுதியில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் விடுதலை
தலை மன்னார் கடற் பகுதியில் கைதுசெய்யப்பட்ட 22 மீனவர்கள் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஐந்து படகுகளில் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி இந்த 22 இந்திய மீனவர்கள் கடற் படையினரினால் கைதுசெய்யப்பட்டு தலை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேற்படி மீனவர்களை பொலிஸார் மன்னார் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 22 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
எனினும் இந்திய மீனவர்களின் படகுகளை கையளிப்பதற்கான வழக்கினை எதிர்வரும் டிசெம்பர் 11ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
தலை மன்னார் கடற் பகுதியில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் விடுதலை
Reviewed by NEWMANNAR
on
November 07, 2013
Rating:

No comments:
Post a Comment