மாவீரர் தினம் என எழுதிக்கொண்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் மன்னாரில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் 72 மணித்தியாளம் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு.
மன்னாரில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் 72 மணித்தியாளம் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு.
மன்னார் முருங்கன் பகுதியில் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் 72 மணித்தியாலம் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ள மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
மன்னார் முருங்கன் பகுதியில் உள்ள வீதி மதில்களில் நேற்று புதன் கிழமை மாவீரர் தினம் என எழுதிக்கொண்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை இராணுவத்தினர் கைது செய்து முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
முருங்கன் பொலிஸார் விசாரனைகளின் பின் குறித்த மூவரையும் இன்று வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
குறித்த மூன்று பேரும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலும்,இன முரண்பாட்டிற்கு வழியமைக்கும் வகையிலும் முருங்கன் பகுதியில் மாவீரர் தினம் என எழுதியதாக கூறி இவர்களை மன்றில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது மன்னார் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் குறித்த 3 சந்தேக நபர்களையும் தங்களுடைய தடுப்பில் வைத்து 72 மணித்தியாலங்கள் மேலதிக விசாரனைக்கு உற்படுத்த வேண்டும் என மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ வின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த 3 நபர்களையும் எதிர் வரும் ஞாயிற்றுக்கிமை வரை 72 மணித்தியாலங்கள் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ள பதில் நீதவான் அனுமதி வழங்கினார்.
குறித்த மூவரையும் மீண்டும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துமாறும் பதில் நீதவான் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மூன்று சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணிகளான பிரிமூஸ் சிறாய்வா,ஜெபநேசன் லோகு,எஸ்.வினோதன் ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாவீரர் தினம் என எழுதிக்கொண்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் மன்னாரில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் 72 மணித்தியாளம் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு.
Reviewed by Author
on
November 28, 2013
Rating:
Reviewed by Author
on
November 28, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment